Friday, January 4, 2013

வாகரை வாணன்


தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி...

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கி வரலாற்றைப் படிப்பவர்கள் மனதில் இலக்கிய மேதைகள் இருவர் உடனடியாக இடம்பிடித்துக் கொள்வார்கள். அவ்விரு மேதைகளில் ஒருவர் மகாகவி பாரதி (1882-1921) மற்றவர் சிறுகதை மன்னன் என்று சிறப்பித்தப் பேசப்படும் விருத்தாசலம் புதுமைப்பித்தன் (1906-1948).

இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றையுடைய தமிழ்க் கவிதையைப் புதியதொர் பாதையில் இட்டுச் சென்ற பெரும்புலவன் பாரதி. தமிழ்க்கவிதை இன்று அவன் வகுத்த வழியிலேயே நடந்து தடையின்றி செல்லுதல் அவனது கவிதா சக்திக்குக் கிடைத்த முழுமையான அங்கிகாரத்ததைக் காட்டும். ஆனால் புதுமைப்பித்தன் நிலையோ வேறு. ஏனெனில் அவன் காலத்தில் தமிழ்ச் சிறுகதையின் வரலாறு ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளையே எட்டியிருந்தது.சிறுகதையென்ற இலக்கியப் பயிரை வளர்த்தெடுத்தவர்களில் மகாகவி பாரதியாரும் வ.வே.சு. ஐயரும் முக்கியமானவர்கள். எனினும் சிறுகதைப் பயிருக்கு பலமான அத்திபாரத்தை இட்ட பெருமை புதுமைப்பித்தனுக்கே உண்டு. இதன் காரணமாகத்தான் புதுமைப்பித்தனை தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்று டாக்டர் மு.வ. போற்றுவார்.(தமிழ் இலக்கிய வரலாறு பக்கம் 299).

புதுமைப்பித்தன் தான் வாழ்ந்த காலத்துச் சமூகத்தை தனது எழுத்தக்களால் சத்திரசிகிச்சைக்குட்படுத்தியவன். அவனின் இந்தப் போர்க்கோலத்தை சுந்தர ராமசாமி புதுமைப்பித்தன் சமூக விமரிசனத்தையே தனத உயிராகக் கொண்டிரந்தார் என்பார். ( ஆ.இரா. வெங்கடாசபதியின் புதுமைப்பித்தன் கதைகள் பக்கம்- 33). புதுமைப்பித்தன் தனது சமூகத்தை சத்திரசிகிச்சைக்குட்படத்ப் பயன்படுத்திய எழுத்து நடை சுயமானது.( saga city) எனச்சொல்லலாம்.

'கண்ணீரிரினூடே தெரியும் விதி...' என்ற தலைப்பில் தேவமகுந்தன் எழதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள சிறுகதை இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கும் வழகாட்டிகள், கூட்டத்தில் ஒருவன் ஆகிய கதைகளைப் படிப்பவர்கள் அவற்றில் புதுமைப்பித்தனின் வாசத்தை நுகரவே செய்வர். 'இவன்' என்ற கதையில் அந்தவாசம் இப்படி வீசுகின்றது. இப்போது பலர் தங்களுக்குத் தாங்களே விழாக்களை நடத்திஇ தங்களுக்குப் பூமாலை சாத்தச் செய்துஇ பொன்னாடை போர்த்தச் செய்து - அவற்றினைப் வர்ணப் புகைப்படங்களாக பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்து பார்த்து மகிழ்கிறார்கள்;. எல்லோரும் கவிதைஇ சிறுகதை என்று சொல்லி ஏதோ எழுதுகிறார்கள். கையில் காசிருந்தால் புத்தகங்களாய் அச்சடித்து வெளியிடுகிறார்கள்.

செய்யுள்களிலும் கவிதைகளிலும் பயன்படுத்ப்படும் அணிவகைகளை உரைநடையிலும் சிறுப்பாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு 'மரநாய்கள்' எனும் கதைத்தலைப்பே போதுமானது. இத.தலைப்பு இராணுவதடதையெ உருவகப்படத்தகின்றமையை கதையின் முடிவில் சொல்லப்படும் ' மரநாய்களை துரத்த வேண்டும்'என்னும் வசனம் உணர்த்தும். பெரும்பாலான எழுத்தாளர்களின் எழுத்திற்கும் அவர்களின் வாழ்க்கைக்குமிடையே பெரிய இடைவெளி இருப்பதண்டு. புரட்சி, புதுமை என்றெல்லாம் மேடைகளில் முழங்கிவிட்டு வீட்டில் இருந்து நல்லநாள் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். தேவமகுந்தனின் 'சின்ன மாமா'வும் அப்படிப்பட்டவர்தான் என்பதைக் கதை சொல்கின்றது.

'சின்ன மாமா' கதையின் கரு எப்படிப்பட்டதாயினும் அது புனையப்பட்ட விதம் ரசிக்கத்தக்கது. எழுத்தாளன் கடல் கொண்டான் பேசும் வீரவசனங்களை கதையின் இடையிடையே இணைத்துள்ளமை கதைக்கு பொலிவையும் அழகையும் தருகின்றது. 'இவன்' என்னும் கதை நன்கு படித்துவிட்டு வேலையின்றி அலையும் ஓர் இளைஞனைப் பற்றியது. படித்தால் மட்டும் போதுமா? கையிலும் பையிலும் நிறைய இருந்தால்தான் ஒருவேலைபை; பெற்றுக் கொள்ளமுடியும் என்னும் உண்மை கதையின் தொக்குபொருளாக உள்ளது. பாவம் அந்த படித்த இளைஞன் கடைசியில் அவனுக்கு பைத்தியம் என்ற பட்டமும் சூட்டப்படகின்றது.

ஆரவாரமிக்க கொழும்பு மாநகரச் சூழலில் வாழ்ந்து கொண்ட நமது இளம் எழுத்தாளர்கள் தாம் எழதிய கதைகளின் ஊடாக தமது பிறந்த மண்ணையும் கல்வி கற்ற கல்லூரியையும் பார்ப்பது அவற்றின் மீது அவருக்குள்ள பற்றையே புலப்படுத்தும். இதைத்தான் தானாடாவிட்டாலும் தன்தசை ஆடும் என்று சொல்வார்கள் போலும். தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி, இடைவெளி, சிவா, இரட்டைக் கோபுரம், ஒரு சுதந்திர நாள், மரநாய்கள் என்னும் கதைகள் போர்க்காலத்தில் தமிழர்கள் எத்தகைய பொறிக்குள் அகப்பட்டிருந்தார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும். எப்படித்தான் தமிழர் அந்நியரோடு நெரங்கிப் பழகினாலும் கடைசி நேரத்தில் காலைவாரி விடு வார்கள் என்பதற்கு இரட்டைக் கோபுரத்தில் வரும் 'பறதெமிழ' என்னும் இரண்டு சிங்களச் சொற்களெ போதும்.

போர்க்காலத்தில் மட்டுமல்ல இன்றும் 'நகுலன்'களின் பிரேதங்களை வைத்தியசாலைகளிலும், காணாமல் போன 'சிவா'க்களின் புகைப்படங்களைத் தாங்கியவாறு தாய்மார் கண்ணீரும் கம்பலையுமாக விதிகளில் அர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும் காணும்பொது தமிழரின் அவலம் ஒர பெரிய தொடர்கதை என்றே எண்ணத் தோன்றுகின்றது. இத்தகு உணர்வுகைளை தேவமுகுந்தனின் கதைகளில் காண்கையில் அவற்றில் பயன்பட்டுள்ள பிரதேசச் சொற்கள, பிறமொழிச் சொற்கள் பற்றி இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடதல் பொருத்தமாகும்.

இன்றைய நவீன இலக்கியங்களான புதுக்கவிதை, சிறுகதை, நாவல் என்பவற்றில் பிரதெசச் சொற்கள் (dialects) பிறமொழிச் சொற்கள் கலத்தல் தவிர்க்க முடியாத என்பது உண்மைதான். மகாகவி பாரதி கூட காணி நிலம் வேணும், பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே என்று பாடியதை நாம் மறப்பதற்கில்லை. எனினும் அத்தகைய சொற்களின் தேவை, மக்கியத்துவம் கருதியே எழுத்தாளர் தாம்படைக்கும் இலக்கியங்களில் பயன்படத்தவது தக்கது. அப்பொதுதான் தமிழின் அழகும் அதன் தனித்தன்மையும் பாதகாக்கப்படும். நவீனம் என்பதற்காக தமிழ் தமிழ்நலிந்துபோக விடலாமா?

தெவமுகுந்தனின் கதைகள் அனைத்துமே அவன் தான் வாழும் சமூகத்தைக் கூர்ந்து பார்க்கும் ஒரு படைப்பாளி என்பதை நிரூபிக்கும். இதுவே புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் மதலான எழுத்தாளர்களின் இலட்சணமுமாகும் என்பதை எண்ணும்பொது நமது இளம் எழுத்தாளரின் எதிர்கால எழுத்துலகம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதை உறுதி செய்ய முடிகின்றது. தேவமுகுந்தன் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்த ஒரு பெருந்திரு என்பது மிகையான கூற்று அல்ல.

வாகரை வாணன்

நன்றி: ஞாயிறு தினக்குரல் 28.10.2012

No comments:

Post a Comment